லண்டன் : பிரிட்டனில் உள்ள நியூ கேஸில் பல்கலையில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்டறியும் சோதனை கிட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் கொரோவை முழுவதுமாக அழிக்க தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளில் பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள நியூ கேஸில் பல்கலைகழக விஞ்ஞானிள் கொரோனா சோதனை தொடர்பான கிட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.