குயிட்டோ: தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட, ஒரு சிறய குடியரசு நாடு ஈக்குவேடார். சின்ன நாடு என்பதற்காக, ஈக்குவேடார் மீது பரிதாபப்படாமல், அங்கும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465 ஆக உயர்ந்துள்ளது; 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈக்குவேடாரில் மருத்துவமனைகளும் மிகக் குறைவு. அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான படுக்கையோ, வென்டிலேட்டர்களோ அங்கு இல்லை. இதனால், போதுமான சிகிச்சை கிடைக்காமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
மேலும், உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு போதுமான இடம் இல்லாததால், உயிரிழந்தவர்களின் சடலங்களை அவரது உறவினர்கள் சாலைகளில் விட்டுச் செல்லும் அவலம் நிலவுகிறது.